விஎல்பி கல்லூரியின் சார்பில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான "விவயுவ- 2017" போட்டிகள் இன்று துவக்கம்


கோவையில், விஎல்பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் "விவயுவ- 2017" என்னும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு இன்று துவக்க விழா கொண்டாடப்பட்டது.



இதில், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகையான போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மின்னணுவியல் துறை சார்பாக ஒரு மாபெரும் கண்காட்சியும் நிகழ்த்தப்படவுள்ளது. இவ்விரு நிகழ்வுகளிலும் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் துவக்க விழாவில் கோவை தி ஹிந்து நாளிதழின் முன்னாள் நிருபர் அமுதாகண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆங்கிலம் என்பது ஒரு பாடம் அல்ல. அது ஒரு மொழி என்றும், தகவல் தொடர்பிற்கு மொழியின் அவசியம் குறித்தும் சமுதாயத்தில் தன்னை ஒரு வரலாறாய் பதிவு செய்வதற்கு மொழியும், எழுத்துப்பணியும் அவசியம் என்றும், மாணவர்களிடையே எழுத்துப் படைப்பாற்றல் வளர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் ஆங்கில மொழியில் தன்னளவில் மேம்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மாணவர்களிடையே கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி உற்சாகப்படுத்தினார்.



இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் ஜெயஸ்ரீசந்தோஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ந.ராஜ்குமார் தலைமையுரை வழங்கினார். இளங்கலை இயக்குநர் சித்ரா வரவேற்புரையாற்றினார்.

நிறைவு விழாவில், கோவைபுதூர் சாந்தி ஆஷ்ரமத்தின் இயக்குநர் வினுஅறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.1 லட்சம் ரொக்க பணத்தினை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக பேராசிரியை ஜாய்சுகன்யா நன்றியுரை வழங்கினார். மின்னணுவியல் துறை கண்காட்சி, துறைத் தலைவர் வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.



Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...